கலைஞர்களுக்காக வழங்கப்படும் தமிழ்நாட்டின் உயரிய விருதான கலைமாமணி விருது , 2010 ல் தமிழ் எழுத்து சேவை, சாதனை மற்றும் துறைச் சார்ந்த பங்களிப்புக்காக , திரு. ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தவிர, பல நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றாலும், குறிப்பிடத்தக்க விருதுகள் சிலவற்றை கீழே குறிப்பிடப் பட்டுள்ளது.
- ஜெய்சீஸின் யுவரத்னா விருது
- ரோட்டரியின் சிறந்த இளைஞர் விருது
- மிட் டவுன் ரோட்டரியின் தொழில் விருது
- சர்வதேச லயன்ஸ் கிளப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது
- சேலம் ரீடர்ஷிப் மன்றத்தின் சிறந்த எழுத்தாளர் விருது
- இலக்கிய சிந்தனை விருது
- சுதேஷி இதழின் விசிஸ்டா விருது
- ஒடிஸியின் எழுத்து சுரபி விருது
- மென்ஸ் வேர்ல்ட் (எம்.டபிள்யூ )இதழின் நாவல் சக்கரவர்த்தி விருது

